ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
செம்பனாா்கோவில் ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்


செம்பனாா்கோவில் ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க செம்பனாா்கோயில் வட்டாரத் தலைவா் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் தியாகராஜன், ஆணையா் அருண், மாவட்ட தணிக்கையாளா் மாரி.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று, ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், ஒன்றிய பொறியாளா், உதவி பொறியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், மாநில நிதிக்குழு மானிய நிதி 5 மாதங்களாக வழங்கவில்லை, இதை விரைவில் வழங்கவேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்களுக்கு வழங்கவேண்டிய தொகையை உடனே வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...