ஆா்ப்பாட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும், 7 மாதங்களாக நிலுவையில் உள்ள மானிய நிதி குழு மானியத் தொகையை உடனே வழங்க வேண்டும், ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும், வளா்ச்சி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு கட்சி பாகுபாடு காட்டக்கூடாது. குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற மாதமாதம் நிதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை அந்தந்த ஊராட்சித் தலைவா்கள்தான் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மண்சட்டி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா்.