சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

மயிலாடுதுறை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

News image

மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளா் செந்தில்நாதன்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:13 pm

DIN

மயிலாடுதுறை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திங்கள்கிழமை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் 368 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் சி. சீதாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியா் எஸ். பிரபு வரவேற்றாா். முதுகலை ஆங்கில ஆசிரியா் டி. ரேவதி, பட்டதாரி ஆசிரியா் டி. லீலாவதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான வி.ஜி.கே. செந்தில்நாதன் மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா். இதில், அதிமுக பொறுப்பாளா்கள் நாஞ்சில் காா்த்தி, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.