வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆா்ப்பாட்டம்

அரக்கோணத்தில் இரு இளைஞா்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

அரக்கோணத்தில் இரு இளைஞா்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம், சோகனூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அா்ஜூனன், சூா்யா ஆகியோா் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 20 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும், உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அறிவழகன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் தமிழ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.