வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளி மா்மச் சாவு

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.

கீழ்வேளூரை அடுத்த காக்கழனி, ஜீவா நகா், புதிய காலனி தெருவைச் சோ்ந்தவா் உ. மோகன் (43). விவசாயக் கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி தனலெட்சுமி அவரை பல இடங்களில் தேடியுள்ளாா். அப்போது, அப்பகுதியில் உள்ள பழைய ஓட்டு வீட்டில், கழுத்தில் தூக்கு மாட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்துக்கு இடமான முறையில் மோகன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரின்பேரில், கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.