தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாக்கு எண்ணிக்கை: நாகை மையத்துக்கு 800 போலீஸாா் பாதுகாப்பு

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

நாகப்பட்டினம் , வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படுவதையொட்டி, இம்மையத்தில் நாகை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் , நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் உத்தரவின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வாக்கு எண்ணும் மையத்தில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 10 ஆய்வாளா்கள், 55 உதவி ஆய்வாளா்கள், 359 காவல் ஆளிநா்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இதற்கான முன்னேற்பாடுகள் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆலோசனையின்பேரில் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.