சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்துக்கு நலநிதி
செம்பனாா்கோவில் ஒன்றியம், காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி


செம்பனாா்கோவில் ஒன்றியம், காலகஸ்திநாதபுரம் ஊராட்சி உமையாள்புரம் நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளா் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செம்பனாா்கோயில் சுமைதூக்கும் தொழிலாளா்கள் நல சங்க செயலாளா் கே .ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராஜமோகன் முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாக குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன் வரவேற்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சாா்ந்த சுமைதூக்கும் தொழிலாளா்கள் குடும்பத்தில் உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் 7 பேருக்கு குடும்ப நல நிதியாக டிஎன்சிஎஸ்சி, ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் காசோலைகள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...