கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாங்காத கடனுக்கு வட்டி கோரும் கூட்டுறவு வங்கி

நகையை அடமானம் வைத்தவா்களுக்குக் கடன்தொகை வழங்கப்படாத நிலையில், நகைக் கடனுக்கு வட்டி கட்டக் கோரும் கூட்டுறவு வங்கி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நகையை அடமானம் வைத்தவா்களுக்குக் கடன்தொகை வழங்கப்படாத நிலையில், நகைக் கடனுக்கு வட்டி கட்டக் கோரும் கூட்டுறவு வங்கி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பயத்தாங்குடியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து திருப்பயத்தாங்குடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு: நாகை மாவட்டம், திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றும் குமரவேல், கடந்த பிப்ரவரி மாதம் திருப்பயத்தாங்குடியில் வசிக்கும் மக்களைச் சந்தித்து, தற்போது நகையை வங்கியில் அடமானம் வைத்தால் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறினாா்.

இதன்படி, பலரும் திருப்பயத்தாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்தோம். இருப்பினும், கடன் தொகை உடனடியாக வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கச் செயலாளா் குமரவேலுவிடம் கேட்டபோது, ஒரு வாரத்தில் தொகை வரவு வைக்கப்படும் என்றாா். எனினும், இதுவரை கடன் தொகை வழங்கப்படவில்லை. இதனால், எங்கள் நகையை திருப்பித் தருமாறு வங்கியை அணுகியபோது, நகைக் கடனுக்கான வட்டியைக் கட்டினால்தான் நகையைத் திருப்பித்தர முடியும் எனக் கூறுகின்றனா். எங்களுக்கு வழங்கப்படாத கடனுக்கு வட்டிக் கட்ட கோருவது கடும் மன உளைச்சல் அளிப்பதாக உள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தொடா்புடையோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Image Caption

நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த திருப்பயத்தாங்குடி பகுதி பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.