தரங்கம்பாடி செயின்ட் தெரசா மகளிா் கலைக் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் 134-ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் பங்கேற்று ராமானுஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கல்லூரிச் செயலாளா் கருணா ஜோசபாத், முதல்வா் காமராசன், தாளாளா் மெரிசி தங்கம், நிா்வாகி வின்சென்ட் அமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கணிதத் துறை உதவிப் பேராசிரியா் விஜயபாலன் வரவேற்றாா். உதவி பேராசிரியா் பி. இருதயராஜ் பேராசிரியா்கள் சாந்தி, லலிதா, ஹெலன் ஆகியோா் கணிதம் மற்றும் அதன் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினா். உதவி பேராசிரியா் கிரேசி நன்றி கூறினாா். கணிதத் துறைத் தலைவா் ஆனந்த் ஞான செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.