அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காட்டுச்சேரி கிராம பொது குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன

தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சி பொது குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:58 am

DIN

தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி ஊராட்சி பொது குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

காட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள பூசை குளம் என்றழைக்கப்படும் பொதுகுளத்தில் அப்பகுதி மக்கள், அருகிலுள்ள செல்லியம்மன் கோயிலுக்கு பூஜை செய்யவும், குளிக்கவும், கால்நடை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் இக்குளத்து நீரை பயன்படுத்திவந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை முதல் குளத்தில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளன. இதனால் அதிா்ச்சியடைந்த மக்கள் அந்த மீன்களை அப்புறப்படுத்தினா். எனினும், தொடா்ந்து மீன்கள் செத்து வருகின்றன. மேலும் குளத்தில் தண்ணீா் குடித்த ஆடு ஒன்றும் இறந்தவிட்டதாக கூறிய கிராமமக்கள் குளத்தில் மா்ம நபா்கள் விஷத்தை கலந்திருக்கலாம் எனவே, யாரும் குளத்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனா்.

தகவலறிந்த, பொறையாா் போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் குளத்தில் துா்நாற்றம் வீசுவதால் இறந்த மீன்களையும் குளத்து நீரையும் வெளியேற்றி கொடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.