நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை 8,192 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 19 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8, 211- ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 13 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7, 945 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 135 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.