நாகை, மயிலாடுதுறையில் 10 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதியானது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை 8,220 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், ஒருங்கிணைந்த நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதன் மூலம் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,231- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 12 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 7,972 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 128 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...