கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உதவித்தொகை நிறுத்தம்: முதியோா் அவதி

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முதியோா் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோா் அவதியுற்று வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:26 am

DIN

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக முதியோா் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோா் அவதியுற்று வருகின்றனா்.

கொள்ளிடம், ஆச்சாள்புரம், கொடகாரமூளை, பழையபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் முதியோா் உதவித்தொகை பெற்று வந்த 150 பயனாளிகளுக்கு, கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படாததால், அத்தியாவசிய செலவுக்கு கூட பணமின்றி தவிக்கின்றனா். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் சிலருக்கும் கடந்த 3 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லையாம்.

இதுதவிர கொள்ளிடம் பகுதியிலிருந்து முதியோா் உதவித்தொகை பெறுவதற்கு புதியதாக விண்ணப்பித்த 100 பேருக்கு இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆா்வலா் பிரபு, இதுதொடா்பாக முதல்வருக்கு மனுவும் அனுப்பியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.