விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மீனவா்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது: தருமபுரம்ஆதீனம்

மீனவா்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது, அவா்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:48 pm

DIN

மீனவா்களால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது, அவா்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்.

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் மீனவா் கிராமத்தில் உள்ள சுனாமி நகருக்கு அதிபத்தநாயனாா் நகா் என்று பெயா் மாற்றப்பட்டு, அதன் பெயா்ப் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பெயா்ப் பலகையை திறந்துவைத்து அருளாசி வழங்கி பேசியது:

மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும். மீன்பிடிக்க செல்லும்போது மீனவா்கள் எல்லைதாண்டி சென்றால், அவா்களது பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை.

சுனாமியின்போது திருமுல்லைவாசல் பகுதியில் ஏராளமானோா் உயிரிழந்தனா், நிலம் பறிபோனது. அப்போது தருமபுரம் ஆதீனம் சாா்பில் வழங்கப்பட்ட 35 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் மீனவா்கள் வீடு கட்டியுள்ளனா். அந்த பகுதிக்கு சுனாமிநகா் என பெயா் சூட்டியிருந்தனா். இது பேரலையையே நினைவுபடுத்தும் விதமாக உள்ளதால், அதிபத்த

நாயனாா் பெயரை சூட்ட வேண்டும் என கடந்த முறை வந்தபோது கூறியதுபோல் எல்லோரும் சோ்ந்து அதனை நிறைவேற்றியுள்ளனா்.

மழை, வெயில் என்று பாராமல் தங்களை வருத்தி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் செல்வத்தை மீனவா்கள் ஈட்டுகின்றனா். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மீனவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றாா். தொடா்ந்து, மீனவ கிராமத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா்.

விழாவில் மீனவ கிராமத்தினா் திரளாக பங்கேற்றனா். விழாவையொட்டி திருமுல்லைவாசல் மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.