பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குண்டும் குழியுமாக மாறிப்போன சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 2:46 am

DIN

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குண்டும் குழியுமாக மாறிப்போன சாலையை சீரமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் புதைசாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்லும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தரங்கம்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20 முறைக்கு மேலாக சாலைகள் உள்வாங்கி பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.

கடந்த மாதம் மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு அருகில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வாகனப் போக்குவரத்து தருமபுரம் சாலை வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரம் சாலை வழியே அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் 2 கி.மீ தூரத்துக்கு சாலைகள் குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளன.

இதுகுறித்து நகராட்சி அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அருட்செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவில், ஜன.14-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலை சரிசெய்யப்படும், அதுவரை இப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய்த் துறையினா் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.