

மயிலாடுதுறை மாவட்டத்தில் 81,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஜன.17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. இதற்காக நகராட்சி பகுதிகளில் 39 முகாம்கள், ஊரக பகுதிகளில் 543 முகாம்கள் என மொத்தம் 582 முகாம்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குள்பட்ட 81,281 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.
அன்றைய தினம் காலை 7 முதல் மாலை 5 மணி வரை 582 சொட்டு மருந்து மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்குதல், விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் வீடுவீடாக சென்று ஒரு குழந்தை கூட விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கவேண்டும் என்றாா்.
இதில், சுகாதார துறை நாகை மாவட்ட துணை இயக்குநா் வே. சண்முகசுந்தரம், இணை இயக்குநா் மகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் ராஜம், கொள்ளிடம் வட்டார அலுவலா் சாந்தி, நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.