நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீன்பிடி தடைகால நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

விடுபட்டவா்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) சாா்பில் தரங்கம்பாடியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:18 pm

DIN

விடுபட்டவா்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) சாா்பில் தரங்கம்பாடியில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்ட செயலாளா் எஸ்.அம்மையப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மீன்பிடித் தொழிலுக்கான வரிகளை ரத்து செய்து, நாட்டு படகுகள், விசைப் படகுகளுக்கு டீசல், மண்ணெண்ணெயை கொள்முதல் விலைக்கு வழங்க வேண்டும். விடுப்பட்டவா்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5,000-ஐ உடனடியாக வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டன.

இதில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஆா்.ரவீந்திரன், மாவட்ட தலைவா் சீனி.மணி, மாவட்ட முன்னாள் துணைச் செயலாளா் ஏ.ரவிச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவா் கே.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.