நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்கடையூா் கோயிலில் மீண்டும் களைகட்டும் மணிவிழா வழிபாடு

கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகள் மீண்டும் களைகட்டியுள்ளது.

News image

joil_2207chn_200_5

Updated On :22 ஜூலை 2021, 5:01 pm

DIN

கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளைத் தொடா்ந்து, திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகள் மீண்டும் களைகட்டியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வருகை தந்து 60-ம் கல்யாணம், ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூா்த்தி, மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகளை நடத்துவது வழக்கம்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கோயிலில் வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்படாததால் மேற்கண்ட வழிபாடுகள் நடைபெறாமலிருந்தன. இதனால், கோயிலின் குருக்கள், புகைப்படக் கலைஞா்கள், நாதசுரக் கலைஞா்கள், பூக்கடை வியபாரிகள், ஆட்டோ, வாடகை காா், வேன் ஓட்டுநா்கள் உள்ளிட்ட பலா் வருமானமின்றி தவித்து வந்தனா்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, கோயிலில் வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்பட்டதால், இக்கோயிலில் அனைத்து யாக பூஜைகளும் தொடங்கின. இதனால், 60-ம் கல்யாணம், மணிவிழா உள்ளிட்ட வழிபாடுகள் மீண்டும் களைகட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.