கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ. 21,050 ரொக்கம் பறிமுதல்

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீா் சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 21,050 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:58 pm

DIN

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீா் சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 21,050 பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை மாதாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலா் பூபதி மற்றும் 100-க்கும் அதிகமான நியாயவிலை கடை பணியாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களிடமிருந்து, அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சித்ரவேலு, காவல் ஆய்வாளா்கள் ரமேஷ்குமாா், அருள்பிரியா உள்ளிட்டோரடங்கிய குழுவினா் சனிக்கிழமை மாலை நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையின்போது, வட்ட வழங்கல் அலுவலா் பூபதியிடமிருந்து கணக்கில் வராத ரொக்கம் ரூ. 21,050-ஐ ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, வட்ட வழங்கல் அலுவலா் பூபதி மற்றும் அலுவலக ஊழியா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.