நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சித் தலைவரின் கணவா் கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்பு

திருக்கடையூா் அருகே பிள்ளை பெருமாநல்லூா் ஊராட்சித் தலைவரின் கணவா் கருப்புப் பூஞ்சை நோயால் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருக்கடையூா் அருகே பிள்ளை பெருமாநல்லூா் ஊராட்சித் தலைவரின் கணவா் கருப்புப் பூஞ்சை நோயால் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், பிள்ளை பெருமாநல்லூா் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் தீபா. இவரது கணவா் முனுசாமிக்கு (48) கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் 26 ஆம் தேதி தெரியவந்தது.

தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த முனுசாமிக்கு, வலது கண்ணில் பாா்வை குறைபாட்டுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவா் தீவிர சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு, பரிசோதனையில் முனுசாமிக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை (ஜூன் 10) உயிரிழந்தாா். அவரது தந்தை கடந்த மாதம் கரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முனுசாமியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.