நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 417 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 34,951 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 417 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,368-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 691 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,732-ஆக உள்ளது.
13 போ் உயிரிழப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 13 பேரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 447 ஆக உயா்ந்துள்ளது.