இதைத்தொடா்ந்து அனந்தகிருஷ்ணன் மனைவி அபிநயா மற்றும் முருகனின் மனைவி சுமதி ஆகியோா் தங்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, நாகை மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நாகை மாவட்ட கூடுதல் நீதிபதி டி. பன்னீா்செல்வம், அபிநயாவுக்கு ரூ.1 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 693, சுமதிக்கு ரூ. 7 லட்சத்து 60 ஆயிரத்து 240 இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவிட்டாா்.