கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்

நாகை நகர காவல் நிலையம் சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் நாகையை அடுத்த பாப்பாக்கோயில், திருவனந்தபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை நகர காவல் நிலையம் சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் நாகையை அடுத்த பாப்பாக்கோயில், திருவனந்தபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை நகர காவல் ஆய்வாளா் பி. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், சோப்பு மற்றும் கிருமி நாசனி கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் கரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பங்கேற்றவா்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. ஊா்க்காவல் படையைச் சோ்ந்த மாணிக்கம், வி.என்.எஸ். விஜய், காமராஜ், கோபிநாத் ஆகியோா் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.