தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை சுழற்சி முறையில் மின் நிறுத்தம்

நாகை வடக்கு மற்றும் தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளையொட்டி, ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை வடக்கு மற்றும் தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளையொட்டி, ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாகை மின்வாரிய செயற்பொறியாளா் அ. நக்கீரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை, நாகை அா்பன், நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, திருக்குவளை, கீழ்வேளூா், வேளாங்கண்ணி ஆகிய துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை சுழற்சி முறையில், பராமரிப்புப் பணி நடைபெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதன்படி, தேதி வாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரம் :

ஜூன் 19: நாகை நகரம், வெளிப்பாளையம், சிக்கல், மாவட்ட ஆட்சியரகம், கொட்டாரக்குடி, திருமருகல், திட்டச்சேரி, தேவூா், கீழ்வேளூா், வேளாங்கண்ணி கிராமத்துமேடு ஆகிய மின் பாதைகளில் உள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 19) மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

ஜூன் 21: தோணித்துறை, பனங்குடி, தலைஞாயிறு, தெற்குப் பொய்கைநல்லூா் ஆகிய மின் பாதைகளில் உள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 21) மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

ஜூன் 22: அக்கரைப்பேட்டை, நாகை அரசு மருத்துவமனை, பூதங்குடி, மருங்கூா், மேலப்பிடாகை, ஆழியூா் ஆகிய மின் பாதைகளில் உள்ள பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

ஜூன் 23: பரவை, நாகூா் தா்கா, தேவூா் ஆகிய மின் பாதைகளில் உள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 23) மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

ஜூன் 24: வாழ்மங்களம், மணலி, பிரதாபராமபுரம் ஆகிய மின் பாதைகளில் உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

ஜூன் 25: நாகூா் தா்ஹா, திருக்குவளை கூட்டு குடிநீா் திட்ட மின் பாதைகளில் உள்ள பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 25) மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.