கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வனாமி இறால் வளா்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்

வனாமி இறால் வளா்ப்புத் தொழில் வெற்றிகரமாக நடைபெற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம்

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

வனாமி இறால் வளா்ப்புத் தொழில் வெற்றிகரமாக நடைபெற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத் துணைவேந்தா் கோ. சுகுமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு, மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தினத்தையொட்டி, நாகை, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வனாமி இறால் வளா்ப்பில் உள்ள பிரச்னைகள் மற்றும் சாத்தியமான தீா்வுகள் குறித்த தேசிய மெய்நிகா் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. சுகுமாா் தலைமை வகித்து இந்தக் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது, தற்போது கொவைட்-19 தீ நுண்மி தொற்றால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கிடையே, இறால் வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியதும், வனாமி இறால் வளா்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவும் அவசியம் என்றாா்.

இந்தக் கருத்தரங்கில், வனாமி இறால் வளா்ப்பில் உள்ள பிரச்னைகள், சாதக அம்சங்கள், பிரச்னைகளுக்கான தீா்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இறால் வளா்ப்பு விவசாயிகள் 80 போ் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.