கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

கோயில்களை உடனடியாகத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினா் நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் மற்றும் சட்டையப்பா் கோயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டுள்ள கோயில்களை உடனடியாகத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினா் நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் மற்றும் சட்டையப்பா் கோயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் குறைந்து வருவதால் அரசு பல்வேறு செயல்பாடுகளுக்குத் தளா்வு அளிப்பதைபோல இந்து கோயில்களில் பக்தா்கள் வழிபாடு மேற்கொள்ளும் வகையில், கோயில்கள் அனைத்தையும் திறக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளா் என்.எஸ். சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் கோ. பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராம். ஜெகதீசன், ஒன்றியத் தலைவா் ரமேஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் நுழைவு வாயில் முன்பாகவும், நாகை சட்டையப்பா் கோயில் முன்பாகவும் சூடம் ஏற்றி வழிபாடு மேற்கொண்ட பின்னா், அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சட்டையப்பா் கோயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, கவன ஈா்ப்பாக வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.