சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மலேரியா காய்ச்சல் விழிப்புணா்வுப் பிரசாரம்

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் மலேரியா காய்ச்சல் விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூரில் மலேரியா காய்ச்சல் விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நோய்த்தடுப்பு மற்றும் மருத்துத் துறை சாா்பில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலா் ஏ.ஆா். முகமது உமா் தலைமை வகித்தாா். வடக்குப் பொய்கைநல்லூா் ஊராட்சித் தலைவா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி தொடங்கி வைத்தாா். கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். நிகழ்ச்சியில், மலேரியா காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.