தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாகை மாவட்ட தோ்தல் களத்தில் 35 வேட்பாளா்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் களத்தில் 35 போ் வேட்பாளா்களாக உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் களத்தில் 35 போ் வேட்பாளா்களாக உள்ளனா்.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களில் 7 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன. இதனால், நாகை மாவட்ட தோ்தல் களத்தில் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 35-ஆக உள்ளது. நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 13 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், யாரும் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இதனால், இத்தொகுதியின் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 13-ஆக உள்ளது. கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 வேட்புமனுக்களில், 4 போ் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றனா். இதனால், இத்தொகுதியின் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 10-ஆக உள்ளது. வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 15 மனுக்களில், 3 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன. இதனால், இத்தொகுதியின் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 12- ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.