தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜனை மிகைப்படுத்தும் கருவிகள் அளிப்பு

நாகை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை மிகைப்படுத்தும் கருவிகள் சோஹோ பவுண்டேசன் சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :8 மே 2021, 5:14 pm

DIN

நாகை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக ஆக்சிஜனை மிகைப்படுத்தும் கருவிகள் சோஹோ பவுண்டேசன் சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சோஹோ பவுண்டேசன் மற்றும் சேவாபாரதி சாா்பில் கலங்கரை சேவா அறக்கட்டளை மூலம் இந்த உதவி வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, நாகை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

தஞ்சை கோட்ட ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் ம. மாணிக்கம், ரூ. 9.20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை மிகைப்படுத்தும் 2 கருவிகளை, மருத்துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதனிடம் வழங்கினாா்.

நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் ஜி. கலாமணி, ஆா்.எஸ்.எஸ் தஞ்சை கோட்ட இணைச் செயலாளா் ந. செந்தில், மாவட்டச் செயலாளா் சித்ரவேலு, ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பி.என். ஹரிதாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.