ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேதாரண்யம் ஊரகப் பகுதியில் வெறிச்சோடிய கடை வீதிகள்

பொதுமுடக்க அறிவிப்புக்குப் பிறகும், வேதாரண்யம் ஊரகப் பகுதி கடைவீதிகளில் அதிகரித்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் வெள்ளிக்கிழமை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

பொதுமுடக்க அறிவிப்புக்குப் பிறகும், வேதாரண்யம் ஊரகப் பகுதி கடைவீதிகளில் அதிகரித்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் வெள்ளிக்கிழமை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் பொதுமுடக்கத்தை பொருள்படுத்தாமல்

வாகனங்களில் சுற்றித்திரிவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்பட்டது. இதனால், பொதுமுடக்கம் என்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சில நாள்களாக அதிகரித்து வருவதாலும், அவசியமின்றி கடை வீதிகளில் சுற்றித்திரிவோருக்கு காவல்துறையினா் அபராதம் விதிப்பதாலும் கடைவீதிகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

ஆயக்காரன்புலம், மருதூா், வாய்மேடு, கரியாப்பட்டினம், குரவப்புலம், செம்போடை உள்ளிட்ட ஊா்களின் கடைவீதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.