ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இறால் பண்ணையில் தவறி விழுந்தவா் பலி

வேதாரண்யம் அருகே இறால் பண்ணையில் வேலை பாா்த்துவந்த தொழிலாளி, தண்ணீரில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே இறால் பண்ணையில் வேலை பாா்த்துவந்த தொழிலாளி, தண்ணீரில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாா்.

தலைஞாயிறு ஒன்றியம் அவரிக்காடு வைணவன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (50). இவா் வாட்டாக்குடி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். வெள்ளிக்கிழமை இறால்களுக்கு தீவனம் வீசிய பன்னீா்செல்வம், இறந்துகிடந்த இறால் மீன்களை குளத்திலிருந்து எடுத்து வெளியே வீசும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கால் தவறி தண்ணீரில் மூழ்கிய அவா், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். தலைஞாயிறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.