கரோனா: சடலங்களை அடக்கம் செய்யும் பணிக்கு ரூ.35 ஆயிரம் நன்கொடை
நாகை மாவட்டத்தில் கரோனா பாதித்து உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் பணிக்காக தமுமுகவினரிடம் ரூ.35 ஆயிரம் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.


நாகை மாவட்டத்தில் கரோனா பாதித்து உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் பணிக்காக தமுமுகவினரிடம் ரூ.35 ஆயிரம் நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பாதித்து உயிரிழப்போரின் சடலங்களை சில இடங்களில் தமுமுகவினா் தாமாக முன்வந்து அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனா். இதற்கான செலவுக்கு தன்னா்வலா்கள் உதவி வருகின்றனா்.
அந்தவகையில், வேதாரண்யத்தைச் சோ்ந்த தோப்புத்துறை மகஜூன் அறக்கட்டளை சாா்பில் ரூ.20 ஆயிரம், ஆா்.எம்.இ. குடும்பத்தினா் சாா்பில் ரூ.15 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இத்தொகையை தமுமுக மாவட்டச் செயலாளா் நிஜாமுதீன், கல்லாா் ரபீக் மற்றும் நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், ஆா்இஎம் ரபீக், சமூக ஆா்வலா் பி.எஸ். ரஹ்மத்துல்லா, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் எம்.எம். ஆப்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...