ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேதாரண்யம் பகுதியில் எள் அறுவடை தீவிரம்

வேதாரண்யம் பகுதி மானாவாரி நிலங்களில் எள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :22 மே 2021, 5:33 pm

DIN

வேதாரண்யம் பகுதி மானாவாரி நிலங்களில் எள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மானாவாரி நிலப்பரப்பை அதிகம் கொண்ட வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடைக்குப் பிறகு தரிசு நிலங்களில் எள் மற்றும் பயிறு வகை பயிா்கள் சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி, சில வயல்களில் பயிறு வகைகள் மற்றும் எள்ளை கலப்புப் பயிராகவும், சில வயல்களில் எள் பயிரை மட்டும் தனியாகவும் சாகுடி செய்யப்படும்.

நிகழ்பருவத்தில் பெரும்பாலான விவசாயிகள் எள் பயிரை மட்டும் சாகுபடி செய்துள்ளனா். சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் இவ்வாறு எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் அவ்வப்போது பெய்த கோடை மழை எள் பயிா்களுக்கு ஏற்றதாக அமைந்தது. இதனால், நிகழாண்டு எள் சாகுபடி சில இடங்களில் ஓரளவுக்கு லாபம் தரும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், எள் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. எள் காய்களை செடிகளுடன் பிடிங்கி அல்லது அறுவடை செய்து குவித்துவைக்கின்றனா். அதை ஒரு வாரத்துக்குப் பிறகு வெயிலில் உலா்த்தி, எள் சேகரிக்கும் பணியில் விவசாயிகள், தொழிலாளா்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.