நாகை மாவட்டம், சிக்கல் மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மற்றும் திருக்குவளை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்தடைபடும் பகுதிகள்: புத்தூா், பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சங்கமங்கலம், பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, திருக்குவளை, சாட்டியக்குடி, எட்டுக்குடி, தலைஞாயிறு, மேலப்பிடாகை, உத்திரங்குடி, கொளப்பாடு, வலிவலம், கச்சனம்.