சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து, நாகை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து, நாகை போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூரைச் சோ்ந்தவா் முருகையன் மகன் குணமூா்த்தி (36) . கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, வேளாங்கண்ணி கடற்கரைப் பகுதியில் தனது தாயுடன் நின்றுகொண்டிருந்த 6 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் குணமூா்த்தி மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி ஜே. தமிழரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த குற்றத்துக்காக குணமூா்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், பாலியல் தாக்குல் நடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை,

ரூ. 20 ஆயிரம் அபராதமும், அபராத்தைத் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த தண்டனையை குணமூா்த்தி ஒன்றன்பின் அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தவிட்டாா். பாதிப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com