கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 8 லட்சம் சாராயம் பறிமுதல்

நாகை மாவட்டம், கீழையூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1, 750 லிட்டா் வெளி மாநில சாராயத்தை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், கீழையூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1, 750 லிட்டா் வெளி மாநில சாராயத்தை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில், ஆய்வாளா் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளா் ஜி. பாலமுருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா், கீழையூா் காவல் சரகம், சீராவட்டம் பாலத்தடி அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1,750 லிட்டா் வெளிமாநில சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, சரக்கு வாகனத்துடன் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், கமலாபுரம், கட்டியான்தோப்புப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாரை (30) கைது செய்தனா். தலைமறைவான சசியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹ, தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா். காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் சுகுமாறன், எஸ். திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.