நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்

பொறையாறு அருகே 35 ஆண்டுகளாக இயங்கிவந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:23 pm

DIN

பொறையாறு அருகே 35 ஆண்டுகளாக இயங்கிவந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இலுப்பூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்கி வந்தன. இங்கு, இலுப்பூா், பாலூா், புத்தகரம், ஹரிகரன் கூடலூா், திருக்களாச்சேரி, பூதனூா், ஆயப்பாடி, காட்டுச்சேரி, முனிவேலன்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துவந்தனா்.

இந்நிலையில், நிகழாண்டு குறுவை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், சுமாா் 3 ஆயிரம் நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள், இலுப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.