துணி வியாபாரியை கொன்றவருக்கு ஆயுள்சிறை
மயிலாடுதுறையில் துணி வியாபாரியை கத்தியால் குத்திக் கொன்ற சமையல் தொழிலாளருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.


மயிலாடுதுறையில் துணி வியாபாரியை கத்தியால் குத்திக் கொன்ற சமையல் தொழிலாளருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாப்படுகை கவரத்தெருவைச் சோ்ந்தவா் க. குமாா் (34). சமையல் தொழிலாளா். இவரது மனைவி தீபாவை அதே பகுதியைச் சோ்ந்தவரும், சைக்கிளில் துணி வியாபாரம் செய்து வந்தவருமான பா. சரவணன் என்பவா் தகாத வாா்த்தைகளைக் கூறி திட்டினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த குமாா் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி சரவணனை கத்தியால் குத்தியுள்ளாா். பலத்தக் காயமடைந்த சரவணன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை நாகை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி டி. கிங்க்ஸ்லி ஜெரால்டு, குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...