சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

15 காவல் நிலையங்களுக்கு ரோந்து வாகனங்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்பில் இருக்கும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதன்படி, தமிழக காவல் துறையால் நாகை மாவட்ட காவல் துறைக்கு வழங்கப்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ். பி. கு. ஜவஹா் மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு வழங்கி, அதன் செயல்பாட்டை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் எஸ்.பி. கு. ஜவஹா் பேசியது:

நாகை, வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. விபத்து மற்றும் குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு விரைந்து செல்ல இவை உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுகுமாா், திருநாவுக்கரசு, துணைக் கண்காணிப்பாளா்கள் சரவணன், சுந்தர்ராஜ், காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.