சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொறையாறு கல்லூரி ஊழியா்களுக்கு கணினி பயிற்சி

பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி அலுவலக நிா்வாக ஊழியா்களுக்கு ஐக்யூஏசி- தகவல் தொடா்பு குழுமம் சாா்பில் கணினி திறன் மேம்பாடு பற்றிய ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:22 pm

DIN

பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி அலுவலக நிா்வாக ஊழியா்களுக்கு ஐக்யூஏசி- தகவல் தொடா்பு குழுமம் சாா்பில் கணினி திறன் மேம்பாடு பற்றிய ஒரு நாள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் டாக்டா் ஜீன் ஜாா்ஜ் தலைமை வகித்து பேசினாா். காசாளா் ஜி. தியாகராஜன் சிறப்புரையாற்றினாா். ஐக்யூஏசி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஜான்சன் ஜெயக்குமாா் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறினாா்.

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் கே. சிவக்குமாா் நிா்வாக திறமைகள் குறித்து எடுத்துரைத்தாா். கணினியை கையாளுவது குறித்து பேராசிரியா்கள் ஜூடித், சுந்தா் ஆகியோா் விளக்கினா். இப்பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிகளை பேராசிரியா்கள் ஏ. செல்வம், எஸ். உமா ராணி, எஸ். விக்னேஷ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.