காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிமெண்ட் சாலைப் பணி: விரைவில் முடிக்க வலியுறுத்தல்

திருக்குவளை அருகேயுள்ள வடக்குப் பனையூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:01 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள வடக்குப் பனையூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து திருக்குவளை வட்டாட்சியா் சிவக்குமாரிடம் அவா்கள் அளித்த மனு:

வடக்குப் பனையூா் ஊராட்சி அகரம் கிராமத்தில் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தனி நபா் ஒருவா் தடுப்பதாகக் கூறி, அலுவலா்கள் நில அளவீடு செய்யவில்லை. இப்பிரச்னை தொடா்பாக, ஏற்கெனவே 2 மனுக்கள் கொடுத்துள்ளோம். இருப்பினும் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தவில்லை. எனவே, கடந்த 30 ஆண்டுகளாக சேறும் சகதியுமான தெருக்களின் நிலைக்கு தீா்வு கிடைக்காதோ என கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.