47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசனம்

நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசன சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் ஆகாசமூா்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீமத் ராமானுஜரை வழிபட்ட பக்தா்கள்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசன சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீமத் ராமானுஜரின்1005-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் பக்தரான ஆகாஷ் சுதாகா் தலைமையில் யாத்திரைக் குழுவினா் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆகாச திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீமத் ராமானுஜா் உருவம் தாங்கிய வாகனத்தில் ஆன்மிக யாத்திரை மேற்கொள்கின்றனா்.

இந்த யாத்திரை குழுவினா் சனிக்கிழமை நாகைக்கு வந்தனா். தொடா்ந்து, பக்தா்களின் இல்லங்களுக்குச் சென்று அருளாசி வழங்கினா். அப்போது, வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜரை பக்தா்கள் வழிபட்டனா். இதில், சிவசேனை கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் சுந்தரவடிவேலன், அகில இந்திய இந்து வளா்ச்சிக் கழக மாநிலப் பொருளாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.