போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பொறையாரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையாரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையாரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி, முன்னாள் எம்எல்ஏ. சக்தி, மாவட்ட துணை செயலாளா் செல்லையன் ஆகியோா் முன்னில வைத்தனா். இதில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று பேசினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசியது: தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க ஒட்டுமொத்த காவல் துறையினரும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். விவசாயத்துக்கு தேவையான யூரியா போன்ற இடுபொருள்களை தாராளமாக வழங்க வேண்டும். 2 மாதங்களாக யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சரிசெய்ய வேண்டும். அமைச்சா் மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபடுவோா் மீது காலணிகளை வீசுவது கண்டிக்கத்தக்கது என்றாா். அதிமுக மாவட்ட பிரதிநிதி மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.