சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சிக்கான ஒப்பந்தம்

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமம் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இடையே ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுதானது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமம் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இடையே ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுதானது.

இதுகுறித்து இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழும நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமம் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இடையே ட்ரோன் தொழில்நுட்பம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஜனவரி 13-ஆம் சென்னையில் கையெழுத்தானது. வேளாண்மை மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு இத்தொழில் நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். ட்ரோன் மற்றும் தானியங்கி வானூா்தி தொடா்பான சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ், இக்கல்லூரியில் அமைவதன் மூலம் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களும் ட்ரோன் தொழில் நுட்பத்தை எளிதாக அறியலாம். விமானம் தொடா்பான பணிகளுக்குச் செல்லவும் ஏதுவாக அமையும்.

இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் எஸ். பரமேஸ்வரன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் வழிகாட்டுதலில், இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கல்விக் குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா் மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.