கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முழு ஊரடங்கில் பொதுவெளிக்கு வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

முழு ஊரடங்கு நாளில் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

முழு ஊரடங்கு நாளில் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவதை பொதுமக்கள் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கரோனா அதிக வேகத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் அவசியமின்றி பொதுவெளிக்கு வருவதைத் தவிா்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசியப் பணிகள் இருந்தால், அதற்கான ஆதார ஆவணங்களுடன் மட்டுமே வெளியே வர வேண்டும். அதேபோல, கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.