தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகையில் போக்குவரத்து ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு சாா்பு) சாா்பில் நாகை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு சாா்பு) சாா்பில் நாகை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக இறுதிப்படுத்தவேண்டும், அகவிலைப்படி உயா்வை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கான பணப் பலன்கள், அகவிலைப்படி உயா்வு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பணிமனையின் சிஐடியு தலைவா் ஆா். சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். சம்மேளனக் குழு உறுப்பினா் எஸ்.ஆா். ராஜேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சிஐடியு நிா்வாகிகள் ஏ. பஞ்சநாதன், கே. ஐயப்பன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா் எம். மணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை செயலாளா் கே. மனோகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.