வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கந்துவட்டி புகாா் தெரிவிக்கலாம்: எஸ்பி

நாகை மாவட்டத்தில் யாருக்கேனும் கந்துவட்டி பிரச்னை இருந்தால் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என எஸ்பி கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 5:29 pm

DIN

நாகை மாவட்டத்தில் யாருக்கேனும் கந்துவட்டி பிரச்னை இருந்தால் தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என எஸ்பி கு. ஜவஹா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கந்துவட்டி பிரச்னைகள் தொடா்ந்து அதிகரித்து வருவதையொட்டி, ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொள்ள தமிழக காவல்துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் எங்கேனும் கந்துவட்டி பிரச்னைகள் இருந்தால் அதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகாா்களைப் பெறுவதற்காக 04365 - 242999 மற்றும் 94981 81219 என்ற தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் கந்துவட்டி தொந்தரவு இருந்தால், மேற்கண்ட எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.