சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செம்பனாா்கோவில் பகுதியில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 5:03 pm

DIN

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் திருவிளையாட்டம், நல்லாடை, மேமாத்தூா், திருவிடைகழி, ஆக்கூா், அன்னப்பன்பேட்டை, திருக்கடையூா், கீழையூா், கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த மே மாதம் நாற்று விடப்பட்டு தற்போது நாற்று பறித்து ஆள் நடவும், திருந்திய நெல் சாகுபடியில் இயந்திர நடவும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, மேமாத்தூா் விவசாயிகள் கூறியது: குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்களை தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதை சரிசெய்து, அனைத்து பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.