வேதாரண்யம்: குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சிறுவர்கள், பெண்கள் சாலை மறியல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சிறுவர்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:  குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சிறுவர்கள், பெண்கள் சாலை மறியல்
Published on
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சிறுவர்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பிராந்தியங்கரை ஊராட்சியில் செயல்படுத்தப்படும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட விநியோகத்தில் பிரச்னை தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் என கிராமத்தினர் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com