பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு
கீழையூா் ஒன்றியம், காமேஸ்வரம் மற்றும் திருக்குவளை ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கீழையூா் ஒன்றியம், காமேஸ்வரம் மற்றும் திருக்குவளை ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காமேஸ்வரத்தில் கீழையூா் வட்டார ஆத்மா குழுத் தலைவரும், திமுக ஒன்றியச் செயலாளருமான ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை திறந்துவைத்து, பால் கொள்முதலை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்விற்கு காமேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மு.ப. ஞானசேகரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி குத்துவிளக்கேற்றினாா். பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எம். அம்பிகாபதி வரவேற்றாா்.
இதில், ஊராட்சி துணைத் தலைவா் திராவிடசெல்வி தமிழ்செல்வன், திமுக வேளாங்கண்ணி பேரூா் கழக பொறுப்பாளா் மரிய சாா்லஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, ஊராட்சி உறுப்பினா் என். அருட்செல்வம் நன்றி கூறினாா்.
இதேபோல, திருக்குவளை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்விற்கு ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா அருணகிரி முன்னிலை வகித்தாா். பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜோதிபாசு வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...